நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன்

Sri Lankan Peoples Crime Deshabandu Tennakoon
By Rakshana MA Mar 19, 2025 04:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் இன்று (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள டபிள்யூ 15 ஹோட்டலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) எட்டு முன்னாள் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு

தேசபந்துவின் ஹோகந்தர இல்லம் மீண்டும் சுற்றிவளைப்பு

இடைக்காலத் தடை 

இதனிடையே, பல நாட்களாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த தென்னகோனைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரிய தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மார்ச் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன் | Deshabandu Tennakoon Surrenders To Court

இதனையடுத்து, தென்னகோனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியதுடன், மனு விசாரணையின்றி நிராகரிக்கப்படுவதாக அறிவித்தது.

இந்த மனு மார்ச் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன் போது தென்னகோனின் சட்ட பிரதிநிதிகள் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரினர்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் குறித்து வெளியான புதிய தகவல்

மேன்முறையீட்டு நீதிமன்றம்

இதேவேளை, தென்னகோனின் சட்டத்தரணி இந்த மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுவொன்றை சமர்ப்பித்து, வழக்கு தொடர்பான மேலதிக ஆவணங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரியுள்ளார். அவரது ரிட் மனு மீதான மேல்முறையீட்டு தீர்ப்புக்கு முன்னதாகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் சட்ட ஆலோசகருக்கும் சட்டமா அதிபருக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலையான தேசபந்து தென்னகோன் | Deshabandu Tennakoon Surrenders To Court

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் தென்னகோன் மற்றும் சந்தேகத்தின் பேரில் 6 பேரை கைது செய்வதற்கான உத்தரவு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி சட்டமா அதிபர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

உடன்படிக்கையின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த தென்னகோனைத் தவிர, கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொறுப்பதிகாரி (OIC) மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களை கைது செய்ய வேண்டாம் என AG CIDக்கு உத்தரவிட்டார்.

சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் கலந்துரையாடுவோம்: பிமல் சபையில் குற்றச்சாட்டு

சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் கலந்துரையாடுவோம்: பிமல் சபையில் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW