ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

SJB Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 16, 2024 08:29 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்கள் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு  வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புலுவன் ஸ்ரீலங்கா’ நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை கல்வி வலயம்

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்ட இஸாக் ரஹூமான், முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.எம்.எம்.முசாரப் ஆகியோரே ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு! | Kumara Welgama A H M Fowzie Support For Ranil

அத்தோடு, இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

மட்டக்களப்பில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

மட்டக்களப்பில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

தனக்கான சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர் சஜித்! ரிஷாட் புகழாரம்

தனக்கான சன்மானங்களை மக்களுக்கே அன்பளிக்கும் உயரிய சிந்தனையாளர் சஜித்! ரிஷாட் புகழாரம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW