வேலைக்காக தென் கொரியா சென்றுள்ள அதிகளவான இலங்கையர்கள்

Sri Lanka Sri Lankan Peoples South Korea Foreign Employment Bureau
By Rakshana MA Oct 23, 2024 12:36 PM GMT
Rakshana MA

Rakshana MA

தென் கொரியாவில் இலங்கை மக்களுக்கான வேலைவாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் நிலையில் அதிகளவான இலங்கையர்கள் வேலைநிமித்தம் சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

உற்பத்தித் துறையில் பணிபுரியும் 882வது குழுவாக மேலும் 46 இளைஞர்கள் இன்று (23) தென் கொரியாவிற்குச் செல்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேலைக்காக தென் கொரியா சென்றுள்ள அதிகளவான இலங்கையர்கள் | Korea Jobs For Sri Lankans

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

அதிகளவான வேலைவாய்ப்புக்கள்

2024 ஆம் ஆண்டில், 87 இளம் பெண்கள் உட்பட 4754 இலங்கையர்களுக்கு கொரியாவில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேலைக்காக தென் கொரியா சென்றுள்ள அதிகளவான இலங்கையர்கள் | Korea Jobs For Sri Lankans

மேலும் உற்பத்தி துறைக்கு 4025 ஊழியர்களும், கட்டுமான துறைக்கு 14 ஊழியர்களும், மீன்பிடி துறைக்கு 74 ஊழியர்களுமாக அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டும் வெளியேறி வேலைக்காக தென் கொரியா சென்றுள்ளனர்.

இதில் ஒரு இலங்கையர் விவசாய துறைக்கு வேலைக்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery