காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 15, 2025 05:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடி மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற முடியுமானவரை உழைத்துக் கொண்டிருக்கின்றேன் என காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் நகர பிதாவாக தொடர்ச்சியாக மூன்று முறை தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.எச்.எம்.அஸ்பர் சிலோன் மீடியா போரம் உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்

தலைமைத்துவம்...

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விமான்கள் பலரும் பல கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் எத்தனங்களை செய்த போதும் அவர்களுக்கு ஆணை வழங்காமல் காத்தான்குடி மக்கள் எங்களுக்கே அவர்களின் ஆணையை வழங்கினார்கள்.

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து | Kattankudy Mayor Shm Asfer Honored

காத்தான்குடி நகர சபையில் உறுப்பினராக, உதவி நகர பிதாவாக, நகர பிதாவாக இரு தசாப்தங்களாக பணியாற்றும் வாய்ப்பை காத்தான்குடி மக்களும், ஊர்த்தலைமைத்துவங்களும் எனக்கு வழங்கினார்கள்.    

சபையை மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் காத்தான்குடி நகருக்கு தேவையான அபிவிருத்தி வேலைகள், காத்தான்குடி நகரத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் செய்து வருகிறேன்.

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

கௌரவிப்பு

காத்தான்குடி தலைமைத்துவங்களும், அதிகாரிகளும் வழங்கும் ஒத்துழைப்பே காத்தான்குடியை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது. எங்களின் பணிகளுக்கு ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வழங்கும் பணி சிறப்பாகவே இருக்கிறது.

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து | Kattankudy Mayor Shm Asfer Honored

நான் தவிசாளராக பதவியேற்று என்னை கெளரவித்த முதல் நிகழ்வாக இது அமைந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் போரத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஈரானை சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்..!

ஈரானை சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்..!

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery