ஈரானை சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்..!
இஸ்ரேல் தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில், அந்த அமைச்சகத்தின் ஒரு கட்டிடம் சிறிதளவு சேதமடைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்தவிதமான பதிலும் வெளியிடவில்லை.
குண்டுவீசி தாக்குதல்
இஸ்ரேலிய விமானப்படை, ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகே உள்ள ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கை குண்டுவீசி தாக்கியுள்ளது.
இதனை ஈரானிய ஊடகங்கள் மற்றும் எண்ணெய் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Additional documentation from the fire at Shahran oil depot in western Tehran. pic.twitter.com/wsuKbeyy8N
— Joe Truzman (@JoeTruzman) June 14, 2025
ஈரானின் எண்ணெய் அமைச்சக செய்தி நிறுவனத்தின்படி, தாக்குதலில் இலக்காக்கப்பட்ட கிடங்கில் எரிபொருள் அளவு அதிகமாக இல்லாததால், "நிலமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெஹ்ரானின் தெற்குப் பகுதியில் உள்ள மற்றொரு எரிபொருள் கிடங்கு மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக எண்ணெய் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
எரிவாயு தளம் தாக்குதல்
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், தனது எக்ஸ் கணக்கில், "தெஹ்ரான் எரிகிறது" என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னதாகவே அவர், “அலி காமெனி தொடர்ந்து இஸ்ரேல் மக்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்கினால், தெஹ்ரான் எரியும்” என எச்சரித்திருந்தார்.
இதனிடையே, ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள புஷெர் மாகாணத்தில் South Pars எரிவாயு தளத்தையும் இஸ்ரேல் தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் முன்பே செய்தி வெளியிட்டிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |