நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்
By Rakshana MA
நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 372 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 110 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 138 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 124 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிரடி சுற்றிவளைப்புகள்
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 132 கிராம் 376 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 236 கிராம் 404 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 92 கிலோ 200 கிராம் 783 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |