கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பிரஜை ஒருவர் கைது

Bandaranaike International Airport Sri Lanka Italy Crime
By Laksi Oct 16, 2024 02:40 PM GMT
Laksi

Laksi

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 40 வயதான ஈரானிய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு 

குறித்த நபர் இன்று அதிகாலை 4:25 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் இருந்து G9-502 ஏர் அரேபியா விமானம் மூலமாக நாட்டை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பிரஜை ஒருவர் கைது | Iranian National Arrested At Katunayake Airport

இதனையடுத்து, அந்த நபர் ஆன்-அரைவல் விசாவைப் பெறுவதற்காக, குடிவரவு அதிகாரிகளிடம் இத்தாலிய கடவுச்சீட்டை வழங்கினார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த கடவுச் சீட்டு திருடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்கு: ரிஷாட்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்கு: ரிஷாட்

தொழில்நுட்ப சோதனை

விசாரணையின் போது, ​​ஈரானிய பிரஜை இலங்கையை ஐரோப்பாவிற்கு செல்லும் வழித்தடமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பிரஜை ஒருவர் கைது | Iranian National Arrested At Katunayake Airport

திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டு மேலதிக தொழில்நுட்ப சோதனைகளுக்காக குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் ச‌மூக‌த்துரோகி: உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் குற்றச்சாட்டு

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் ச‌மூக‌த்துரோகி: உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW