உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி
கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கை சுற்றி பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதன் மையக் காரணமாக, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான சிக்கலான போர் நிலைமை காணப்படுகின்றது.
ஜூன் 13ஆம் திகதி, ஈரான் அணுசக்தி தலங்களையும் முக்கிய இராணுவ இலக்குகளையும் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் இந்த செயல், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முனைப்பை தடுக்கவே என சர்வதேசம் விளக்குகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது கட்டவிழ்த்தது.
வெளியான காணொளி
ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களில் வானத்தில் குண்டு மழையை பொழிய வைத்தது. அந்த காட்சிகள் நகரவாசிகளுக்கு பெரும் பயத்தையும், குறிப்பிட்ட இடங்களில் சேதத்தையும் ஏற்படுத்தின.
We are ready to surprise the world.pic.twitter.com/f514m0ZM1n
— Tehran Defence (@TehranDefence) June 16, 2025
இது மட்டும் அல்ல கடந்த சனிக்கிழமை அதிகாலை, இரண்டாவது அலை தாக்குதல்களாக, ஜெருசலேம் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள் நிகழ்ந்தன.
இது, இரு நாடுகளுக்கிடையே நிகழும் மோதல் இன்னும் தீவிரமடையும் என்பதைத் தெளிவாக காட்டியது. இத்துடன், ஈரான் வெளியிட்ட புதிய காணொளி உலகத்தைக் கலக்கி வருகிறது.
“உலகையே ஆச்சரியப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோ, பல்வேறு சர்வதேச தலைமை நிர்வாகங்களிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
காணொளிக்கான பின்னணி
சில மணி நேரங்களுக்கு முன்னரே, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கு முன்னர் ஒரு வலுவான ஆயுதத்தைக் காட்டும் வீடியோவையும் வெளியிட்டிருந்தது.
தற்போது வெளியான இந்த புதிய காணொளிக்கு பின்னால், வேறொரு பெரும் தாக்குதலுக்கான சைகையா? அல்லது உள்நாட்டு மக்களிடையே ஈரானின் தைரியத்தைக் காட்டும் உள்நாட்டு உந்துதலா? என்பதைப் பற்றி வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் இந்த நிலைமை இன்னும் எவ்வாறு பயங்கரப் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறதென்பது, உலகத்தின் எதிர்வினைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |