மட்டக்களப்பில் நாய்க்கடிக்கு இழப்பீடு பெற்ற பெண்..!

Sri Lanka Police Batticaloa Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA Jun 16, 2025 05:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் நாய் கடிக்கு இலக்கான பெண்ணொருவர் நாய் உரிமையாளரிடமிருந்து 40,000 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.

பக்கத்து வீட்டிலிருந்த நாயின் கடிக்கு இலக்கான குறித்த பெண் பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளார். அதனை தொடர்ந்து நாயின் உரிமையாளரால் நேற்றைய தினம் (15) அந்த பெண்ணுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

மருதமுனையில் விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

மருதமுனையில் விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு

நட்டஈடு

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டு நகரில் வாழ்ந்துவரும் ஒய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வந்துள்ளார்.

மட்டக்களப்பில் நாய்க்கடிக்கு இழப்பீடு பெற்ற பெண்..! | Sri Lanka Dog Attack Police Complaint

இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவரின் உறவிர்களை அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணத்தால் அடிக்கடி முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறிருக்க சம்பவ தினமான 14ஆம் திகதி நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்டதை தொடர்ந்து குறித்த நாய்கள் பக்கத்து வீட்டிலிருந்த பெண் ஒருவருக்கு கடித்துள்ளது.

திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம்

திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம்

பொலிஸார் நடவடிக்கை

இதன்போதே குறித்த பெண்ணினால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு சாராரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தடுப்பு ஊசி போட வேண்டும் என நட்டஈடான 40,000 வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

மட்டக்களப்பில் நாய்க்கடிக்கு இழப்பீடு பெற்ற பெண்..! | Sri Lanka Dog Attack Police Complaint

இந்நிலையில், குறித்த உரிமையாளர் இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து நட்டஈடு வழங்கப்பட்டதுடன், மட்டு பொலிஸாரினால் குறித்த முறைப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தாக்குதலில் சிக்கிய இலங்கை இளைஞர்

ஈரானின் தாக்குதலில் சிக்கிய இலங்கை இளைஞர்

ஈரானின் ஏவுகணைக்கு இலக்கான இஸ்ரேலின் பல்கலைக்கழகம்

ஈரானின் ஏவுகணைக்கு இலக்கான இஸ்ரேலின் பல்கலைக்கழகம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW