மருதமுனையில் விளையாட்டு கழகத்திற்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு
மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் கலீல் முஸ்தபாவினால், கழக வீரர்களுக்கு புதிய சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விழாவானது, மருதமுனை பிரதான வீதி முஸ்தபா ட்ரேட் காம்ப்ளக்சில் நடைபெற்றது.
விசேட நிகழ்வு
இதன்போது வீரர்களுக்கு புதிய சீருடைகள், கையுறைகள், பேட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த இந்த நிகழ்வு, கழகத்தின் நிலையான வளர்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாகவும், உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான ஓர் உத்வேகமாகவும் அமைந்தது.
அத்துடன், வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகத்துடன் பங்கேற்று, கிராமத்தில் விளையாட்டுப் பரிமாணம் தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையை வலியுறுத்தினர்.
மேலும், இந்நிகழ்வில் மருதமுனை கோல்ட் மைண்ட் கழக ஸ்தாபகர் மற்றும் ஓய்வுநிலை மாவட்ட காணி பதிவாளர் முஸத்திக் ஜே முஹம்மட், கழக நிறைவேற்று பணிப்பாளர் எம்.பி.எம். ரசீட் (ஆசிரியர்), செயலாளர் எம்.சி.ஏ. நஸார் (அதிபர்), பொருளாளர் ஏ.எம். றியாஸ் (ஆசிரியர்), பயிற்றுவிப்பாளர்கள் எஸ்.எம். நுபைஸ் மற்றும் ஆர்.எம். றிஸாப், அணித் தலைவர் ஜே.எம். சாதிர், கிங்ஸ் லெவன் அணியின் செயலாளர் இசட்.எம். ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

