இந்தியப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Bandaranaike International Airport Malaysia India Crime
By Laksi Oct 17, 2024 01:10 PM GMT
Laksi

Laksi

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்ட  இந்தியப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இலங்கை சுங்க அதிகாரிகளால் நேற்று (16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மலேசியாவில் இருந்து UL 315 என்ற விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

மேலதிக விசாரணை

இதன்போது, அவரது பயணப் பொதியில் புடவைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது | Indian Passenger Arrested With Ice Drug

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ. 25 மில்லியன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபரும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW