சிலாபத்தில் பெருமளவான பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 05, 2024 09:11 AM GMT
Laksi

Laksi

புத்தளம்- சிலாபம் பகுதியில் படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பீடி இலை பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04) சிலாபம் கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

மேலதிக விசாரணை

சம்பவத்தில் பெரியகுடியிருப்பு மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபத்தில் பெருமளவான பீடி இலை பொதிகளுடன் இருவர் கைது | Huge Amount Of Beedi Leaves Recovered In Chilaw

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 02 படகுகள் மற்றும் 1,331 கிலோ 830 கிராம் நிறையுடைய 42 பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW