சொர்க்கத்தை அருளும் நாற்பது ஹதீஸ்கள்
ஹஜ்ரத் ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்க்ள அறிவிக்கிறார்கள். என்னுடைய உம்மத்திலிருந்து நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்பவர்கள் சொர்க்கத்தில் சேர்ந்திடுவார் என்று ரஹுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ள நாற்பது ஹதீஸ்களை பற்றி யாரஸூலுல்லாஹ்! அவை எந்த ஹதீஸ்கள் என்பதாக நான் கேட்ட போது நபியவர்கள் கூறியதாவது,
1. அல்லாஹ்வை கொண்டு நீ ஈமான் கொள்ள வேண்டும்.
2. மறுமைநாளை கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
3. வானவர்களை கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
4. வேதங்களை கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
5. நபிமார்களை கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
6. இறந்து பின் உயிர் கொடுத்து எழுப்புதல் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும்.
7. நன்மையும் தீமையும் அல்லாஹ்வினால் ஏற்படுகின்ற என்ற தக்தீரை ஈமான் கொள்ள வேண்டும்.
8. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்றும், மெய்யாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதர் என்றும் நீ சாட்சி கூற வேண்டும்.
9. பரிபூரணமாக உளூச் செய்து தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
10. ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.
11. ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.
12. உனக்கு பொருளிருந்தால் ஹஜ்ஜூச் செய்ய வேண்டும்.
13. ஒவ்வொரு நாளும் சுன்னத்து முஅக்கதா பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுது வர வேண்டும்.
14. ஒவ்வொரு இரவிலும் வித்ரு தொழுகையை நீ விட்டுவிட வேண்டாம்.
15. அல்லாஹ்விற்கு எப்பொருளையும் இணைவைக்க வேண்டாம்.
16. உன் பெற்றோருக்கு மாறு செய்ய வேண்டாம்.
17. அனாதைகளின் பொருளை அநியாயமாக சாப்பிட வேண்டாம்.
18. மது அருந்த வேண்டாம்.
19. விபச்சாரம் செய்ய வேண்டாம்.
20. பொய்ச்சத்தியம் செய்ய வேண்டாம்.
21. பொய்ச்சாட்சி சொல்ல வேண்டாம்.
22. மனோ இச்சைப்படிச் செயல்பட வேண்டாம்.
23. உன் முஸ்லிமான சகோதரனை பற்றி புறம் பேச வேண்டாம்.
24. பத்தினிப் பெண்ணை பற்றி அவதூறு சொல்ல வேண்டாம்.
25. உன் முஸ்லிமான சகோதரனுக்கு வஞ்சகம் செய்ய வேண்டாம்.
26. வீண் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.
27. வீண் விளையாட்டாளர்களுடன் சேர வேண்டாம்.
28. குள்ளமான ஒருவரை குறைகூறும் எண்ணத்துடன் குள்ளனே என கூற வேண்டாம்.
29. மனிதர்களில் யாரையும் பரிகாசம் செய்ய வேண்டாம்.
30. கோள் சொல்ல வேண்டாம்.
31. எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்திடுவாயாக.
32. சோதனைகள், துன்பங்கள் ஏற்படும் போது பொறுமையை கடைப்பிடிப்பாயாக.
33. அல்லாஹ்வின் தண்டனையை பற்றி நீ அச்சமற்றிருக்க வேண்டாம்.
34. உன்னுடைய உறவினர்களை துண்டித்து வாழ வேண்டாம்.
35. அவர்களுடன் சேர்ந்து வாழ்வீராக.
36. அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரையும் சபிக்க வேண்டாம்.
37. ஹுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் என்பனவற்றை அதிகமாக ஓதி வருவீராக.
38.ஜூம்ஆவையும், இரு ஈதுப் பெருநாட்களையும் தவறவிட்டு விடாதே.
39. உனக்கு ஏற்பட்ட நன்மையோ, தீமையோ அது விதிப்படி நிகழ்ந்ததாகும், அது உன்னை விட்டு நீங்கக் கூடியதாக இல்லை, உனக்கு தவறிவிட்ட ஒன்று உன்னை வந்தடையக்கூடியதாகவும் இல்லை.
40. எந்த நிலையிலும் குர்ஆன் ஓதுவதை விட்டு விடாதே.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |