உச்சம் தொடும் தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, தங்கத்தின் விலையானது இன்று (16) சடுதியாக 4000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களில் 1,028,374 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,032,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 36,420 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 291,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 33,390 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 267,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 254,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை
அத்துடன், செட்டியார் தெருவின் தங்க விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 269,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 248,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |