மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Rukshy
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஏனையவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |