டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தி பிரதேச மக்களை ஆபத்திலிருந்து மீட்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா வசீரின் தலைமையில் கொள்கலன் சேகரிப்பு நிகழ்வு காரைதீவு மாவடிப்பள்ளி பிரதேசத்தில் இன்று(02) நடைபெற்றது.
சிரமதானம்
மேலும், இந்த நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், சுற்றாடல் கழக மாணவர்கள், பிரதேச சபை ஊழியர்கள் நுளம்பு பெருகும் இடங்களை பரிசோதனை செய்து நுளம்பு பெருகும் பொருட்களை பிரதேச சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |