ஜீப் வண்டி மோதி குடும்பஸ்தர் பலி: சாரதி கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 27, 2024 07:23 AM GMT
Laksi

Laksi

நிட்டம்புவ பகுதியில் வீதியோரம் சென்று கொண்டிருந்த நபர் மீது ஜீப் வண்டி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (27) நிட்டம்புவ - திஹாரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

மேலதிக விசாரணை

குறித்த நபர் மீது கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டியே மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜீப் வண்டி மோதி குடும்பஸ்தர் பலி: சாரதி கைது | Family Member Was Killed In A Jeep Collision

இதனையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த நபர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாணின் விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW