ஊரடங்கு சட்டம் நடைமுறை: பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மன்னார் மக்கள்

Sri Lanka Police Mannar Curfew
By Laksi Sep 22, 2024 06:25 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என இன்று (22) நண்பகல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர

மேலதிக பாதுகாப்பு

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு சட்டம் நடைமுறை: பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மன்னார் மக்கள் | Curfew In Sl Warning Police In Mannar People

இதேவேளை, ​ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னிலையில் சஜித்

திருகோணமலை மாவட்டத்தில் முன்னிலையில் சஜித்

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW