தொடரும் மழையுடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 17, 2024 02:17 AM GMT
Rukshy

Rukshy

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்:பொதுமக்கள் விசனம்

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம்:பொதுமக்கள் விசனம்

இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் மழையுடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை | Continued Rainy Weather In Sri Lanka

இந்நிலையில், மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பூண்டுலோயாவில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

பூண்டுலோயாவில் தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

திருகோணமலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை: தீர்வுக்கு குகதாசன் எம்.பி உறுதி

திருகோணமலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை: தீர்வுக்கு குகதாசன் எம்.பி உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW