நாட்டில் நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 22, 2025 03:03 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வானிலை தொடர்பில் இன்று(22) வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே மேலுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு

நாட்டில் அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு

கனமழை

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை | Climate Change In Sri Lanka

இந்நிலையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு

கல்முனையில் டெங்கு தடுப்பு பரிசோதனை முன்னெடுப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் இதன்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் மின்னல்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டில் நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை | Climate Change In Sri Lanka

அம்பாறையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதி! மக்கள் வெளியிட்ட விசனம்

அம்பாறையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதி! மக்கள் வெளியிட்ட விசனம்

வைத்தியர் முகைதீன் கொலையில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு

வைத்தியர் முகைதீன் கொலையில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW