திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி

Ministry of Education Trincomalee Eastern Province University Grants Commission
By Laksi Oct 22, 2024 09:36 AM GMT
Laksi

Laksi

கடந்த 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி மூன்று பாடங்களில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவின் அனுசரணையுடன்  நேற்று (21) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றுள்ளது.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 439 முறைப்பாடுகள் பதிவு

தெளிவூட்டல்

இதன்போது, அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களை இணைத்தல், அக்கல்வி நிறுவனங்களின் கற்கைநெறிகள் அதற்கான தகைமைகள், கற்கை நெறிகளுக்கு அரச வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் போன்ற பல விடயங்கள்  தெளிவூட்டப்பட்டது.

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சி | Clarification Students Not Received Uni Admission

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர், திறன் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், மனித வள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW