மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

Batticaloa Parliament of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jul 17, 2025 05:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நேற்று (16) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், கந்தசாமி பிரபு ஆகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் இடம் பெற்றது.

மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் 20 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு

முன்மொழிவுகள்

இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய தம்மிக்க பட்டபெந்தி கலந்துகொண்டார். இதன்போது, சுற்றாடல் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் | Batticaloa Coordination Meeting

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பல முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தார்.

அதனடிப்படையில், ஓட்டமாவடி மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை தாங்குதலால், உயிரிழப்பு உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த பிரதேசத்திற்கு யானை வேலி அமைக்கப்பட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இதற்கான நிதியினை விரைவாக ஒதுக்கீடு செய்து இத்தேவையை பூர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

நாட்டில் வேகமாக பரவும் நோய்..! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

வழங்கப்பட்ட உறுதி மொழி 

அதேபோல், ஓட்டமாவடி பிரதேசத்தில் அமைந்துள்ள அரிசி ஆலைகள், மர அலைகள் என்பனவற்றால் சூழல் மாசடைவு, அதிக சத்தம் போன்ற பல காரணங்களால் இத்தொழிற்சாலைகளை ஓட்டமாவடி பத்திரிகை தொழிற்சாலை காணிகளுக்கு மாற்றுவதற்கு எழுபது ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் | Batticaloa Coordination Meeting

அத்தோடு, சுற்றாடல் அதிகார சபை காணியை அமைச்சு வழங்குமாக இருந்தால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என தெரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என உறுதிமொழி வழங்கினார். 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருமலையில் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்

திருமலையில் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW