மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

Batticaloa Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 20, 2024 08:15 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (20) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

வாக்களிப்பு நிலையங்கள்

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Ballot Boxes Polling Stations Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 4,49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய நேரகாலத்திற்கு சென்று செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

சூடுபிடிக்கும் தேர்தலுக்கான ஏற்பாடுகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW