திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

Election Commission of Sri Lanka Trincomalee Election
By Mayuri Sep 20, 2024 06:16 AM GMT
Mayuri

Mayuri

திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இன்று (20) காலை முதல் இடம்பெற்று வருகிறது.

அத்தோடு, திருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்தா கல்லூரி செயற்படவுள்ளது.

முன்னாயத்த நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையில் நாளைய தினம் (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இம்முறை தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

இவ்வாறான சூழலில் தேர்தலை முன்னிட்டு நாடெங்கிலும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் காலத்தில் இடம்பெறும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் வாக்காளர்களுக்கும், ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு பல அறிவுறுத்தல்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery