ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Election Commission of Sri Lanka Election Sri lanka election 2024
By Chandramathi Sep 20, 2024 02:17 AM GMT
Chandramathi

Chandramathi

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை, உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மாலை 4.15 மணியளவில் ஆரம்பமாகும்.

கோரிக்கை

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Request Publication Of Unofficial Results

இருப்பினும் சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுகின்றன.

எனவே இவ்வாறான செயற்றப்படுகளை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.