இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம்

Sri Lanka Australia Economy of Sri Lanka
By Rakshana MA Feb 05, 2025 01:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட யுனைட்டெட் பெட்ரோலிய நிறுவனம், சுமார் 27.5 மில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்திருந்தது.

அதன் காரணமாக சுமார் ஐநூறு அளவிலான எரிபொருள் விநியோக நிலையங்கள் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

பல கொள்ளைச் சம்பவங்கள்: சம்மாந்துறையில் கைதான மூவர்

பல கொள்ளைச் சம்பவங்கள்: சம்மாந்துறையில் கைதான மூவர்

முதற்கட்ட நடவடிக்கைகள்

எனினும், தற்போதைய நிலையில் பெட்ரோலிய விநியோகத்தில் தம்மால் சமாளிக்க முடியாத சிக்கல்கள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், அதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள அவுஸ்திரேலிய நிறுவனம் | Australian Firm Exits Srilanka Fuel Supply Market

அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு அதன் பணியாளர்களின் ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.    

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

இலங்கை ரூபாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்

திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம்

திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW