புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: இராணுவ சிப்பாய் பரிதாப மரணம்

Sri Lanka Police Puttalam Sri Lanka
By Laksi Oct 12, 2024 10:42 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - கற்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (11) இரவு கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் புத்தளத்திலிருந்து பாலாவி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் பலி

திருகோணமலையில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் பலி

மேலதிக விசாரணை

இதன்போது, உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ சிப்பாய் எனவும் புத்தளம் புணர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: இராணுவ சிப்பாய் பரிதாப மரணம் | Army Soldier Died In An Accident In Puttalam

மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை

விடுமுறை நாட்களிலும் பேருந்து பருவச் சீட்டை பயன்படுத்த அனுமதிக்குமாறு பணிப்புரை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW