சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Badulla Crime Sri Lanka Customs
By Laksi Oct 12, 2024 09:39 AM GMT
Laksi

Laksi

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி வருமானத்தை புறக்கணித்திருந்த ஜீப் வாகனமொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அதிகமான வரி மோசடி

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த ஜீப் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Illegal Vehicle Is Government Owned

பதுளை  பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த அதிசொகுசு ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த அனுமதி தேவை! பிரதமரின் செயலாளர்

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்த அனுமதி தேவை! பிரதமரின் செயலாளர்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW