அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

Ampara Risad Badhiutheen Eastern Province
By Laksi Aug 25, 2024 04:38 AM GMT
Laksi

Laksi

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு "புதிய யுகம் நோக்கிய பயணம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது நேற்று (24) சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்ட, சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

கலாசார நிகழ்வுகள்

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலி கௌரவ அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக் ஜவாத், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர், கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஐ.எல்.எம். மாஹீர், கட்சியின் பிரதிச்செயலாளர் நாயகம் அன்சில் அல் - அமீரி, முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இளைஞர்,யுவதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு | Ampara District Youth Awakening Conference Risad

இங்கு மூவின மக்களினதும் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், பாராட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery