மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

Ampara Sri Lanka Politician Sri Lankan Peoples Local government Election
By Rakshana MA Apr 06, 2025 12:34 PM GMT
Rakshana MA

Rakshana MA

மக்கள் மாற்றத்தை விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ரீ.எம்.ஐயூப்(Iyoob) தெரிவித்தார்.

நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைமையால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் மக்கள் இம்முறை தேசிய காங்கிரஸை நிராகரிக்க முடிவெடுத்துள்ளார்கள்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

போலியான வாக்குறுதிகள் 

அதனால் இசங்கணிச்சீமையில் ஒரு வேட்பாளர் கிடைக்காத நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது.

தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இசங்கனிசீமை வட்டாரத்தில் போட்டியிட வெளி வட்டாரத்தில் இருக்கும் ஒருவரை நிறுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு வாக்களிக்க இசங்கனிச்சீமை வட்டாரத்தில் யாரும் தயாராக இல்லை.

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை! | Akkaraipattu Candidate Ayyoob Speech

மேலும், கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையால் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக இசங்கணிச்சீமை வட்டார மக்களை முழுமையாக ஏமாற்றினார்கள்.

இசங்கணிச்சீமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு விடயங்களிலும், பள்ளிவாசல் காணி விடயங்களிலும் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றினார்கள். இதுபோல மக்களுக்கு போலியான விளம்பரங்களை செய்தார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்தபாடில்லை.

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை! | Akkaraipattu Candidate Ayyoob Speech

கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சில்லறை விளையாட்டுக்களை மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். இவர்களின் போலி முகங்கள் பற்றி  மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இம்முறை மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை எங்கள் வசமாகும். நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

கல்முனையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு

கல்முனையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW