இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏர் - சிப் சேவை: கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் உடன்படிக்கை கைச்சாத்து

Sri Lanka Government Of Sri Lanka Senthil Thondaman
By Sajithra Sep 12, 2024 12:20 PM GMT
Sajithra

Sajithra

தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் ஏர் - சிப் (Air- Ship) சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச ஏர் ஸ்பேஸ் (Air Space) நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இவ்வுடன்படிக்கை, இன்று (12.09.2024) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள நிலாவெளி, மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுற்றுலா பயணிகள் 

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏர் - சிப் சேவை: கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் உடன்படிக்கை கைச்சாத்து | Air Ship Service In Sri Lanka Senthil Thondaman

இந்நிலையில், சர்வதேச ஏர் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்,

"இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது, கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது.

ஆளுநர் ஏர் ஸ்பேஸ் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர்.

எங்களுடைய ஆய்வு அறிக்கையின் படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து ஏர் ஸ்பேஸ் வேலைத்த்திட்டத்திற்காக முழு முதலீடு செய்யவுள்ளோம்" என சுட்டிக்காட்டியுள்ளார். 

GalleryGallery