கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து : மௌலவி ஒருவர் ஸ்தலத்தில் மரணம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை இடம்பெற்ற விபத்தில் மௌலவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்றையதினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவி எம்.எஸ்.எம்.ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஸ்தலத்தில் மரணம்
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த மௌலவி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |