3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி
Ramadan
Colombo
Sri Lankan Peoples
Iftar
By Rakshana MA
கொழும்பில்(Colombo) உள்ள கிரீன் பாத்தில் மூன்று நாள் ரமலான் கொண்டாட்ட நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் இந்த ரமழான் கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ரமழான் கொண்டாட்டமானது, மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் ஏற்பாட்டில் நேற்று (21) ஆரம்பமாகி, நாளை (23) நிறைவடைகிறது.
ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி
பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், மகா சங்கத்தினரும், பிற மதங்களைச் சேர்ந்த குருக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, பல்வேறு உணவுகளை ருசிக்கும் வாய்ப்பும், கலாச்சார கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |