இலங்கையில் இதுவரையில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Police spokesman Sri Lanka Police Sri Lankan Peoples Crime Death
By Rakshana MA Aug 18, 2025 04:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 220 ஆண்களும் 37 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் துணைக் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய 69 உள்ளுர் பிரஜைகளும் 33 வெளிநாட்டுப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

உயிரிழப்புகள் 

பொலிஸாரின் உயிர் காப்புப்பிரிவினர் இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | 257 Drowning Deaths In 2025 Sl

கடந்த 2024ம் ஆண்டில் 135 பெண்கள் உள்ளிட்ட 645 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பரீட்சயமற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீராடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!

மரணத்திற்கான காரணம் 

மது போதை காரணமாக அதிகளவான நீரில் மூழ்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் நீரில் மூழ்கி உயிரிழந்தோர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | 257 Drowning Deaths In 2025 Sl

எனவே சுற்றுலாப் பயணங்களின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் நீர்நிலைகளில் நீராட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான நால்வரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான நால்வரிடம் விசாரணை முன்னெடுப்பு

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் அங்குரார்பணமும் ஊடக சந்திப்பும்

வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் அங்குரார்பணமும் ஊடக சந்திப்பும்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW