காத்தான்குடியில் 23 பேர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 27, 2024 07:43 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கசிப்பு மற்றும் போதைப்பொருளுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது, 250 லீற்றர் கசிப்புடன் 22 பேரும், ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, நாவற்குடா உட்பட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

மேலதிக விசாரணை

அத்தோடு, கர்பலா பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதைப்பொருளுடன் 63 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் 23 பேர் கைது | 23 People Arrested With Drugs In Kattankudy

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW