மட்டக்களப்பில் இளைஞனின் உயிரை பறித்த தொடருந்து!
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08) அதிகாலை 1.30 மணிக்கு தொடருந்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ்.நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
விபத்து
தொடருந்து கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சடலத்தினை மோதியதொடருந்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |