மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Sri Lanka Eastern Province Accident
By Rakshana MA Oct 21, 2024 11:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - கூளாவடி பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (20) பிற்பகல் நடைபெற்றுள்ளது.

மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு

மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு

விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட பெண் கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் வி.விஜயராணி என தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோயினால் பீடிக்கப்பட்ட பெண் மன உளைச்சல் காரணமாக தன்னை தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Woman S Burnt Body Recovered In Batticaloa

மேற்படி சம்பவத்தினை பற்றிய தகவல்கள் கிடைத்ததையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்றதுடன் உடலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு

முன்னாள் அமைச்சரது உறவினரின் இல்லத்தில் பெறுமதிமிக்க வாகனங்கள் மீட்பு

ஸாஹிரா பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு

ஸாஹிரா பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery