சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது

Anuradhapura Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 05, 2024 01:41 PM GMT
Laksi

Laksi

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் - சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக குறித்த பெண் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

நீதிமன்றில் முன்னிலை

இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த பெண் கொண்டு சென்ற உணவுப் பொதியில் இருந்த தேங்காய் சம்பலில் போதைப்பொருள் கலந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.

சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது | Wife Arrested Bringing Drugs Her Husband In Jail

இதனையடுத்து, சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW