இன்றைய நாளுக்கான காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

Department of Meteorology Climate Change Weather
By Rukshy Jul 29, 2024 02:24 AM GMT
Rukshy

Rukshy

இன்றைய நாளுக்கான காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்தில் மாயமான ஆட்டிறைச்சி: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பொலிஸ் நிலையத்தில் மாயமான ஆட்டிறைச்சி: பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

பல தடவைகள் மழை பெய்யும்

குறிப்பாக, வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

இன்றைய நாளுக்கான காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு | Weather Announcement For Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: ரணில் உறுதி

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: ரணில் உறுதி

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக இழுபறி

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக இழுபறி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW