பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

Parliament of Sri Lanka Trincomalee Eastern Province General Election 2024
By Laksi Oct 11, 2024 12:19 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக அப்துல்லாஹ் மஹ்ரூப் போட்டியிடுகின்றார்.

இதனையடுத்து, புதிய ஜனநாயக முன்னணி கட்சி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவி்க்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபா பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இரண்டு ஆசனங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்திற்கான மொத்த 04 ஆசனங்களில், போனஸ் ஆசனத்துடன் இரண்டு ஆசனங்களை கைப்பற்றும்.

பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப் | We Will Capture 2 Seats In Trinco Abdullah Maharup

இந்த முறை நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி திறமையான சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறது.ஆதலால் எமக்கு திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் எமக்கு ஆதரவினை தருவதற்கு தயாராக உள்ளனர்.

நாம் இந்தமுறை திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அதிகளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்று சாதனைப் படைப்போம்: பிரதமர் ஹரிணி

அதிகளவிலான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்று சாதனைப் படைப்போம்: பிரதமர் ஹரிணி

திருகோணமலையில் வேட்புமனுவினை தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி

திருகோணமலையில் வேட்புமனுவினை தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW