கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Sri Lankan Peoples
Eastern Province
Accident
Death
By Rakshana MA
கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய கலுகபுகே சரத் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
விசாரணை
தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழைய கட்டிடத்தின் சுவரை அகற்ற முயன்றபோது அது இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிசார் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |