எரிபொருள் அச்சத்தை அதிகரிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர்..!
ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகளவான மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு படையெடுப்பதுடன், அதிகமான எரிபொருளை கொள்வனவு செய்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தநிலையில், நேற்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவான மக்கள் வரிசையில் காத்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாகவும், சில நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











