திருமலையில் விபத்து : சம்பவ இடத்தில் வைத்தியர் பலி
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் எரிபொருள் தாங்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் 59 வயதுடைய வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று(17) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்த நபர் வைத்தியரட என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம்
மேலும், இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற பவுசர், முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வைத்தியர் கெல்வின் (வயது-59 என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உதவியாளர் என்.லாபீர் (வயது -55) எனவும் தெரியவருகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி செலுத்திச் சென்ற நபர் படுகாயம் அடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த வைத்தியரின் சடலம் சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |