ஈரானின் தலைவர் சரணையடை வேண்டும்.! வலியுறுத்தும் ட்ரட்ப்
ஈரானின் உயர் தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது அமெரிக்காவிற்கு தெரியும், ஆனால் அவரை இப்போதைக்கு கொல்லப்போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் நிபந்தனையற்ற சரணடைதலை, ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
உயர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும், அவர் ஒரு எளிதான இலக்கு. அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.இப்போதைக்கு அவரை கொல்லப்போவதில்லை.
வலியுறுத்தும் ட்ரட்ப்
எனினும் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை தாம் விரும்பவில்லை. அத்துடன் தமது பொறுமை குறைந்து வருகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரானின் 9.5 மில்லியன் குடியிருப்பாளர்கள், அங்கிருந்து வெளியேறுமாறு, ட்ரம்ப் வலியுறுத்திய பின்னர், இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கமெனி பற்றிய கருத்துகளும் சரணடைய அழைப்புகளும், ட்ரம்ப் தெஹ்ரான் வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக, கூறிய சிறிது நேரத்திலேயே வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |