தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 33 வேட்பாளர்கள் கைது
Sri Lanka Police
Election Commission of Sri Lanka
Sri Lankan Peoples
Election
By Rakshana MA
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 33 வேட்பாளர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) பதினைந்து ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் மூலம் கைது செய்யப்பட்ட ஆதரவாளர்களின் மொத்த எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
குற்றச்சாட்டுக்கள்
நேற்று (29) மட்டும் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, பெறப்பட்ட மொத்த குற்றவியல் புகார்களின் எண்ணிக்கை 89 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியதாக 23 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், மொத்த புகார்களின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |