அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த பதற்றம் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் ஆபத்தான அளவில் யுரேனியம் செறிவூட்டுவதாக உளவுத்துறை உறுதி செய்தால், நிச்சயமாக மீண்டும் குண்டுவீசுவேன்!” என்றும், “ஈரானின் தலைவரை நேரடியாக தாக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தடை விதித்தேன்” என்றும் தனது ட்ரூத் சோசியல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரானின் முக்கிய அணு ஆய்வுகள் நடைபெறும் இடங்களை வான்வழி தாக்குதலின் மூலம் சேதப்படுத்தினர்.
ஈஸ்பஹான் பகுதியில் உள்ள அணு தொழில்நுட்ப மையங்கள் பல, இந்த தாக்குதலால் முற்றிலும் சேதமடைந்துள்ளன என செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கு பதிலளித்த ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி கமேனி, “எந்தவொரு முக்கியமான பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.
ஆனால் ட்ரம்ப், “அது பொய். உண்மை தெரிந்தும் பொய் கூறுகிறார்” என்று கடுமையாக பதிலடி கொடுத்தார். மேலும், “அயத்துல்லா எங்கு ஒளிந்திருந்தார் என்பதை நாங்கள் துல்லியமாக அறிந்திருந்தோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்ச்சி தெரிவித்ததாவது: “அணு மையங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது” என அவர் உண்மையை உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழப்புகள்...
இவ்வாறு ஏற்பட்ட மோதல்களில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரானில்: சுகாதார அமைச்சகம் தெரிவித்ததப்படி, 610 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இஸ்ரேலில்: 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தரப்பில், “ஈரான் விரைவில் அணுகுண்டு தயாரிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
அதனைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஈரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தது: “நாங்கள் அணுசக்தியை பொதுப் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது போன்ற சூழ்நிலையில், ட்ரம்ப் NATO உச்சிமாநாட்டில், “பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது” எனக் கூறியிருந்தாலும், ஈரான் அதனை முற்றிலும் மறுத்துள்ளது. “இப்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை” என்றே அவர்கள் மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாடுகளும் தங்களது வெற்றிகளை தனித்தனியாக அறிவித்தாலும், உண்மையில் இந்த திடீர் தாக்குதல்கள் உலகத்தை மீண்டும் ஒரு பெரிய போர் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய அபாயச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |