ராஜிதவை கைது செய்ய தயாராகும் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முக்கிய குற்றச்சாட்டு ஒன்றில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்றொழில் துறைமுக சட்டக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் துணைத் தலைவர் உபாலி லியனகே இன்று (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் இதை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜித சேனாரத்ன
இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ய உள்ளதாக ஆணைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட துறைமுக சட்டக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகேவை இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன் முன்னிலைப்படுத்திய நிலையில் பின்னர் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.