போதை மாத்திரைகளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 14, 2024 11:47 AM GMT
Laksi

Laksi

போதை மாத்திரைகளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மேலதிக விசாரணை

சந்தேகநபரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மற்றும் இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதை மாத்திரைகளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது | University Student Arrested With Drugs

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டவர் ரணிலே: முசம்மில் தெரிவிப்பு

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம்

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW