மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

Sri Lanka Police Batticaloa Kurunegala Sri Lanka
By Rakshana MA Oct 23, 2024 02:29 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள சீயோன் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக மட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (23) இவர்களை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸாரினால் இக்கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலைக்காக தென் கொரியா சென்றுள்ள அதிகளவான இலங்கையர்கள்

வேலைக்காக தென் கொரியா சென்றுள்ள அதிகளவான இலங்கையர்கள்

விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 35 வயதையுடையவர்கள் எனவும் குருநாகலைச் சேர்ந்த இவர்களில் ஒருவருக்கு கண்ணில் வெண்படல நோயுள்ளதாகவும் அதனை குணப்படுத்தவே இங்கு வந்ததாக கூறியுள்ளார்கள்.

மட்டக்களப்பில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது | Two People Arrested For Suspiciously In Batticaloa

மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தின் போதகருடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை மட்டக்களப்பை வந்தடைந்த இருவரும் செல்லும் வழி தெரியாமல் குறித்த தேவாலயத்தினை தேடிய நிலையில் தான் மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW