மட்டக்களப்பு கொடூர கொலை வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது!
மட்டக்களப்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பாக இரட்டை சகோதரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் உள்ள வீடொன்றில் தனித்திருந்த, 38 வயதுடைய, இரு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா கடந்த மே 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.
விசாரணை
சம்பவத்தின்போது கழுத்துப் பகுதியில் தீவிரமான வெட்டுக் காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் வெளிக்காட்டியிருந்தன.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சமூகத்தில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல தரப்பினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், 24 நாட்கள் கடந்தபின், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடியாக கண்காணித்த சூழ்நிலையில், அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் (D.C.D.B) உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையிலான விசேட குழு, 34 வயதுடைய இரட்டையர் சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளது.
இரட்டை சகோதரிகள் கைது
குறித்த சந்தேக நபர்கள், விரைவில் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
மேலும், கொலை நடந்த நேரத்தில், உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலைக்காக தங்கியிருந்ததாகவும், சம்பவத்துக்குப் பின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் DVR சாதனம் காணாமல் போயிருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் மேலும் பல விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |